இது 4+3 வார்த்தைகளில் 2 அடி என்ற முறையில்ஆங்கிலத்தில், தமிழில் இருக்கும் 4+3 சீர், 2 அடி என்ற முறையில் எழுதப்பட்ட திருக்குறளின் மொழிபெயர்ப்பு. ஆகும். தமிழில் குறள் வெண்பா என்ற இலக்கணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேப்போன்று ஆங்கிலத்தில் கப்லெட்(couplet) இலக்கணமும் வெண்பா குறள் இலக்கணமும் சேர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது..
குறள் வெண்பாவில் 4+3 சீர் இருப்பதும், இரண்டு வரிகளில் இருப்பதும் இலக்கணம். ஆனால் கப்லெட்டில் இரண்டு வரிகள் இருக்கவேண்டும், அதேவேளையில் இரண்டு வரிகளிலும் சரிசமமான meter இருக்கவேண்டும். ஆங்கிலத்தில் meter என்பது syllable என்ற முறையில் கணக்கிடப்படும். தமிழில் சீர் meter முறையில் கணக்கீடு செய்யப்படும்.
ஆக, வார்தைகள் சீர் போன்று எடுக்கப்பட்டாலும்,அந்த வார்தைகளின் meter இரண்டு வரிகளிலும் ஒரே அளவுள்ளதாக இருக்கும்படி வார்த்தைகள் தெரிந்தெடுக்கப்பட்டு 1330 குறள்களிலும் உபயோக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர் முனைவர் ஸ்டீபன் லூயி அவர்கள் 12 வருடங்கள் செலவு பண்ணவேண்டியதாயிற்று.
உதாரணம்:
If God is denied – 4 வார்த்தைகள்- 5 Syllables meter
It profits nothing – 3 வார்த்தைகள் 5 Syllables meter
மொழிபெயர்ப்பின் சிறப்பு:
இதுவரையிலும் இதுபோன்ற மொழிப்பெயர்ப்பு வெளிவந்ததில்லை என்பதும் இதன் சிறப்பு.முன்னாள் துணைவேந்தரும், தமிழ் மொழி அறிஞருமான அவ்வை நடராஜன், இந்த புத்தகம் ஒரு தன்னிகர் இல்லாத ஒரு நிகழ்வு, திருக்குறளை முழுவதுமாக சுருங்க, தெளிவாக 4+3 வார்தைகளில் சொல்லும் விதம், துணிவு, திருக்குறளின் மூலம் பெறப்பட்ட வெளிப்பாடாக மட்டுமே இருக்கமுடியும் என சொல்லத்துணிந்ததாகக் குறிப்பிடுகிறார்..
தன்னிலை விளக்கம்:
டாக்டர் ஸ்டீபன் லூயி சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவர், ஆங்கில இலக்கணம், சட்டம், குற்றவியல், மனோவியல், தொழில் மேளாண்மை, மதங்கள் போன்றனவற்றில் முதுனிலை பட்டமும், முனைவர் பட்டங்களையும், மேலும் பல கவ்வுரவ பட்டங்களையும் பெற்றவர்.. “பராத் ஜோதி” என முன்னாள் தமிழ்நாட்டின் கவர்னர் அவர்களால் கவுரவிக்கப்பட்டவர்.. இவர் 12 வருடங்கள் திருக்குறளை ஆய்வுசெய்து 4+3 வார்தைகளில் இரண்டு அடிகளில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்து, இதனை UNESCO அங்கிகாரத்திற்கும் அனுப்பியுள்ளார்..
முன்னாள் UNESCO டைரக்டர்
இதனால் கவரப்பட்ட மௌரிஷியஸ் (Mauritius) முன்னாள் UNESCO டைரக்டரும், 13 வருடங்கள் இடைவிடாது தொடர்ந்து நாடாளுமன்ற அமைச்சராகவும் இருந்த பேராசிரியர் ஆருமுகம் பரசுரமன் (தற்போதைய உலக திருக்குறள் ஃப்வுண்டேஷன் நிருவனரும் தலைவரும்) இந்த மொழிபெயர்பு சார்ந்து பேசுவதறக்காக சென்னை வந்து ஆசிரியர் டாக்டர் ஸ்டீபன் லூயி அவர்களை சந்தித்தார்கள். அப்போதுதான் அவரை சிறப்பு விருந்தினாராக தன் நாட்டிற்கு அழைக்கப் போவதாகவும், தமிழ் மக்களிடம் இது சார்ந்து பேசவிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
சிறப்பு விருந்தினர் (Chief Guest)
இந்த மொழிபெயர்ப்பு பழனியப்பா பிரதர்ஸ் மூலம் ISBN 978-93-88139-60-1 ஆக வெளியிடப்பட்டுள்ளது. புத்தக வெளியீட்டு விழா சென்னையில் 27.10.2018 நடைபெற்றது. இந்த, புத்தக மொழிபெயற்பினால் ஈர்க்கப்பட்ட மௌரிஷியஸ் தமிழ் மக்கள் 2019 ஜனவரி 25, 26 ஆகிய தினங்கள் டாக்டர் ஸ்டீபன் லூயி அவர்களை தங்கள் நாட்டின் திருவள்ளுவர் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக (Chief Guest) அழைத்து பெருமைப்படுதினார்கள். அவ்விழாவில் அந்நாட்டின் பொறுப்பு ஜனாதிபதி (Acting President) மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி G.O.S.K. முக்கிய விருந்தினராகவும், (special Guest),, விவசாய, மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு மெஹன் குமார் சிருட்டன் கவ்வுரவ விருந்தினாராகவும் (Guest of Honour) கலந்து கொண்டார்கள். டாக்டர் ஸ்டீபன் லூயி 25ம் தேதி மௌரிஷியஸ் அரசாங்க முனிசிபல் அரங்கத்தில், “சட்டம், மனோவியல், குற்றவியல் ஆகியன திருக்குறளின் பார்வையில்” என இரண்டு மணி நேரம், சட்டவல்லுனர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் “THIRUKKURAL ENGLISH COUPLET” ஐ அடிப்படையாகக் கொண்டு உரையாற்றினார்கள். அந்நாட்டு பத்திரிகைகள் இவைகளை செய்தியாக்கியுள்ளன என்பது சிறப்புச் செய்தி.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX